
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடைந்த படுதோல்விகளின் விளைவாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேற வேண்டியதாயிற்றூ.
இந்திய அணி சரியாக விளையாடமல் தோற்றதற்கு தவறான அணி தேர்வே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்களை இந்திய மெயின் அணியில் எடுக்காதது, அஷ்வினை முதல் 2 போட்டிகளில் ஆடவைக்காதது, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்தது, சாஹலுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ராகுல் சாஹரை ஆடவே வைக்காதது, விக்கெட் வீழ்த்த திணறிய வருண் சக்கரவர்த்திக்கு தொடர் வாய்ப்பளித்தது என இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட தவறுகளை செய்தது.
இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், இந்திய அணி தேர்வை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங். குறிப்பாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக ராகுல் சாஹரை அணியில் எடுத்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.