
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை (பிப்ரவரி 11) அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்து, ஆட்டநாயகன் விருதை வென்றவர் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா. அவர் வீசிய 9 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களை வீசி, 9 ஓவர்களில் மொத்தமாக வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார் பிரசித் கிருஷ்ணா.
ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டார். ஐபிஎல்லில் 34 போட்டிகளில் ஆடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பிரசித் கிருஷ்ணா.