Ind vs wi 3rd odi
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன் - ஷுப்மன் கில்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன், ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அரைசதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 351 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவின் ஷர்துல் தாக்கூர், முகேஷ் குமார் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.