டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 6ஆம் இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![Hardik Pandya becomes the first Indian No.6 to score a fifty in the T20 World Cup history! டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!](https://img.cricketnmore.com/uploads/2024/06/hardik-fiftu-lg.jpg)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் தன்ஸித் ஹசன் ஷாகிப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.
Trending
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தாலும், மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரிஷப் பந்த் 36 ரன்களையும், ஷிவம் தூபே 34 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தாலும், இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தன் மூலம் தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றும் 6ஆம் இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் தனித்துவ சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி டி20 உலகக்கோப்பை தொடரில் 300 ரன்கள், 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் 6ஆவது வீரராகவும் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக்கோப்பை தொடரில் 300 ரன்கள் + 20 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
- ஷாஹித் அஃப்ரிடி (பாகிஸ்தான்)
- டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்)
- ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா)
- ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
- முகமது நபி (ஆஃப்கானிஸ்தான்)
- ஹர்டிக் பாண்டியா (இந்தியா)*
Win Big, Make Your Cricket Tales Now