Advertisement
Advertisement
Advertisement

ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 18, 2022 • 21:54 PM
Hardik Pandya Is One Of The Best All-Rounders In The World Right Now: Dinesh Karthik
Hardik Pandya Is One Of The Best All-Rounders In The World Right Now: Dinesh Karthik (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பரபரப்பாக நடைபெற்று நேற்று மான்செஸ்டர் நகரில் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் நேற்றைய கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 259 ரன்களை குவித்தது.

பின்னர் 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஆனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் அணியின் இளம் ஆல் ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஆகியோரது ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதோடு வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றது.

Trending


இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் ரிஷப் பண்ட் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்து 125 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரினை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் பந்துவீச்சில் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் 71 ரன்கள் அடித்து அசத்தினார்.

அவரது இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி மற்றும் யுவராஜ் போன்ற பலவீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வேளையில் தற்போது இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ரிஷப் பண்ட் ஒரு குவாலிட்டியான இன்னிங்ஸை தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் விளையாடியது அற்புதமாக இருந்தது. அதேபோன்று ஹர்திக் பாண்டியா தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதோடு ஹார்டிக் பாண்டியாவின் இந்த சிறப்பான ஆட்டத்தினை பார்த்து வியந்த அவர் தற்போதைய கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா தான் என தெரிவித்துள்ளார். பாண்டியாவிற்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் அவர் பதிவிட்ட இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement