
Hardik Pandya On Whether He’ll Bowl For Ahmedabad In IPL 2022 (Image Source: Google)
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மெகா ஏலம் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக 2 புதிய அணிகளும் தலா 3 வீரர்களை எடுத்துள்ளன.
லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.
லக்னோ அணியை கேஎல் ராகுலும், அகமதாபாத் அணியை ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளனர். ஹர்திக் பாண்டியா முதல் முறையாக கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படவுள்ளார்.