
இந்திய அணியில் நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடர் மூலம் கம்பேக் கொடுத்தார். ஒரு கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தது ஒருபுறம் இருந்தாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக செயல்பட்டார்.
ஐபிஎல் 2022 தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் 487 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் அதிக ரன் அடித்தவர் இவர்தான் ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 8 விக்கெட்களை வீழ்த்தினார். அதுவும் தேவையான நேரத்தில் 140+ கிமீ வேகத்தில் வீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பழைய ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்துவிட்டேன். ரசிகர்களும் என்னை நம்ப தொடங்கியுள்ளனர். இனி இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அதனை எதிர்நோக்கியுள்ளேன். குஜராத் அணிக்காக என்ன செய்தேனோ, அதை அப்படியே இந்திய அணிக்காகவும் செய்வேன்.