
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஹார்டிக் பாண்டியா, "இது ஒரு ஸ்பெஷலான வெற்றி. ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். அதுவும் சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு மேல் என்ன வேண்டும். ஒருவேளை நாங்கள் இந்த போட்டியில் தோற்று இருந்தால் மிகவும் வருத்தம் அடைந்து இருப்போம். ஆனால் நமது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதோடு நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினோம்.