
Hardik Pandya Unlikely To Be Retained; Rohit Sharma, Jasprit Bumrah, Kieron Pollard Set To Be In Mum (Image Source: Google)
அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக வீரர்கள் தேர்வு செய்ய மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இந்தாண்டும் மெகா ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதிய அணிகளும் வருவதால் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
அதன்படி 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 அயல்நாட்டு வீரர்கள் என தக்கவைக்கலாம். இல்லையென்றால் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை தக்கவைக்கலாம் என்ற வசதியுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் எந்தந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.