
இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவுக்கு அடுத்த சிறந்த மற்றும் தரமான ஆல்ரவுண்டராக பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டராக தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்த ஹர்திக் பாண்டியா, இடையில் ஒன்றிரண்டு ஆண்டுகள் காயம் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து ஆடமுடியாமல் தனக்கான இடத்தை இழந்தார்.
அதன்விளைவாக மீண்டும் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அபாரமாக விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா, தொடர் நாயகன் விருதையும் வென்றார்.