
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷதி ராணி 22 ரன்களையும், ஷமிமா சுல்தானா 17 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷொபனா மொஸ்டரி 23 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 2 ரன்கள், ரிடு மோனி 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதிவரை களத்தில் இருந்த ஷொர்னா அக்டெர் 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ரேகர், மின்னு மணி, ஷஃபாலி வர்மா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.