-mdl.jpg)
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் விராட் கோலி ஃபில்டிங் செய்யும் போது பந்தை எரிந்தது போல் ஏமாற்றியதாக வங்கதேச கிரிக்கெட் அணி குற்றஞ்சாட்டி உள்ளது.
இது ஐசிசி விதிப்படி தவறு என்பதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரன்கள் நடுவர்கள் தரவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் அணி புகார் கூறி உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை விராட் கோலி பிடித்து வீசுவது போல் செய்ததாக வங்கதேசம் கூறுகிறது.
ஆனால் பந்து விராட் கோலி அருகில் தான் வந்தது என்றும் அதனை பிடிக்க தயாராக இருந்த விராட் கோலி பந்து தம் அருகில் சென்று விட்டதால் அதனை எறிவது போல் சாதாரணமாக தான் கையை சுத்தினார். இது குறித்து களத்தில் இருந்த நடுவர்களும் பேட்ஸ்மேன்களும் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் தோல்வி அடைந்த பிறகு இதனை ஒரு காரணமாக வங்கதேசம் தூக்கிக்கொண்டு வருகிறது.