
நடப்பு ஐபிஎல் தொடரில், அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டி, தொடர்நது வெற்றிகளை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு போட்டிகளும் அசத்தலாக சென்று கொண்டிருக்கிறது.
அதே போல, முந்தைய ஐபிஎல் தொடர்களில் இளம் வீரர்கள் ஜொலித்து வந்ததை போல, இந்த முறையும் பல இளம் வீரர்கள், கிரிக்கெட் உலகை தங்கள் பக்கம் திருப்பி உள்ளனர். ஆயுஷ் பதோனி, உம்ரான் மாலிக், சாய் சுதர்ஷன், அபிஷேக் ஷர்மா என பல வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை மிக கச்சிதமாக பயன்படுத்தி தங்கள் திறனையும் நிரூபித்து வருகின்றனர்.
ஆனால், அதே வேளையில் சில சீனியர் வீரர்கள் ஆட்டம், அதிக அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி மற்றும் மும்பை அணியிலுள்ள ரோஹித் ஆகியோர், அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். கடைசியாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய போது, 53 ரன்கள் அடித்து, தன்னுடைய முதல் அரை சதத்தை நடப்பு சீசனில் பதிவு செய்திருந்தார் கோலி. இருந்தாலும், தொடர்ச்சியாக அவர் ரன் அடிப்பாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.