
ஐபிஎல் தொடரில் பல அணிகள் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள், என்னை நம்பவில்லை, ஆர்சிபி அணி எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்னை நம்பினார்கள் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
ஆர்சிபி அணியில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து விராட் கோலி விளையாடி வருகிறார். ஏறக்குறைய 15 சீசன்களாக கோலி விளையாடியதில் 8 சீசன்களுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டம் ஒருமுறைகூட சாம்பியன் பட்டம்வெல்லவில்லை. இதுவரை 217 போட்டிகளில் ஆடி 6,469 ரன்களை கோலி குவித்துள்ளார். 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனிலிருந்து கோலி கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக மட்டுமே அணியில் நீடிக்கிறார்.
இருப்பினும் கோலிக்கும், ஆர்சிபி அணிக்கும் இடையிலான நெருக்கம், பந்தம், நட்பு, குறையவில்லை. தொடர்ந்து கோலி ஆர்சிபி அணியில் இருந்து வருகிறார், ஆர்சிபியும் கோலியை விடுவதாக இல்லை. ஆர்சிபி அணிக்கும் ,தனக்கும் இருக்கும் பிணைப்பு குறித்து விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: