
He deserves every penny earned at IPL 2022 auction: Sunil Gavaskar on Harshal Patel (Image Source: Google)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் சேர்த்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் 67 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
ஐபிஎல் ஏலத்தில் டாப்-3 பட்டியலில் இந்தியர்களே இடம்பெற்று இருந்தனர். இஷான் கிஷன் (மும்பை) ரூ.15.25 கோடிக்கும், தீபக் சாஹர் (சென்னை) ரூ.14 கோடிக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா) ரூ.12.25 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டோன் (பஞ்சாப்) ரூ.11.5 கோடிக்கு விலை போனார். அதற்கு அடுத்த 4 பேரில் இருவர் இந்தியர்கள். ஹர்ஷல் படேல், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ரூ.10.75 கோடிக்கு ஏலம் போனார்கள்.