
உலக கோப்பையில் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி பலம் குன்றிய ஆஃப்கானிஸ்தானுடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு பலரும் பாபர் ஆசாம் மீது பழி சுமத்தி வருகிறார்கள்.
எனினும் நேற்றைய ஆட்டத்தில் பாபர் ஆசாம் 92 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணி தோற்பதற்கு பாபர் அசாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம். பீல்டிங்கில் சொதப்புவது தான் ஆனால் முன்னாள் கேப்டன் வசிம் அகரம் பாபர் அசாம் செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டினார். அதில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46ஆவது ஓவரை சுழற் பந்துவீச்சாளருக்கு பாபர் ஆசாம் ஏன் குடுத்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.