Advertisement
Advertisement
Advertisement

இறுதி டெஸ்டில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 10, 2021 • 11:37 AM
'He has to come in, there is no question about it': Gavaskar
'He has to come in, there is no question about it': Gavaskar (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி தொடரை கைப்பற்றும்.

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முடிவில் இங்கிலாந்து அணி களமிறங்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியில் சிறப்பான சம்பவங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத முகமது ஷமி தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதால் 5ஆவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

Trending


அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து யாராவது ஒருவர் நீக்கப்பட வேண்டும் ஆனால் முகமது ஷமிக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங்கில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் நிச்சயம் அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக ஷமி விளையாடும் பட்சத்தில் யார் வெளியேற்றப்படுவார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முகமது ஷமி அணியில் இணையும் பட்சத்தில் பும்ரா பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் பும்ராவின் பணிச்சுமையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

ஆனால் இது குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணியில் பும்ரா நிச்சயம் விளையாடவேண்டும். ஏனெனில் நாம் இதுவரை இன்னும் தொடரில் முழுமையான வெற்றியை பெறவில்லை. எனவே இந்த டெஸ்ட் தொடரை வெல்வது தான் நமக்கு முக்கியமான ஒன்று. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்காரணமாக நிச்சயமாக கடைசி போட்டியில் பும்ரா விளையாட வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தேவையற்ற ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement