
சர்வதேச போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் அறிமுகமான சில மாதங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் அர்ஷ்தீப் சிங். ஆங்காங்கே ஒரு தவறுகள் செய்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் மற்றும் ரன்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.
ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இவரது செயல்பாடு கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதிக நோ-பால்கள் வீசுகிறார். ஒய்டுகள் அதிகமாக வீசுகிறார். டெத் ஓவர்களில் ரன்களை வாரிக்கொடுகிறார். இலங்கை அணியுடன் நடந்த டி20 போட்டியின் போது ஒரே போட்டியில் ஐந்து நோ-பால்கள் வீசி மோசமான சாதனையை படைத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் கடைசி ஓவரில் நோ-பால் உட்பட 27 ரன்கள் வாரிக்கொடுத்தார்.
இவை இரண்டும் மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு தந்து தோல்விக்கும் ஒரு காரணமாக மாறியது. இந்நிலையில் அர்ஷ்தீப் பந்துவீச்சு மற்றும் அவரது முனைப்பு குறித்து கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.