
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அணியை பலப்படுத்தும் இறுதி கட்ட வேலையில் இறங்கியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரே கடைசி வாய்ப்பு என்பதினால் இப்பொழுதே அணியின் பெஸ்ட் லெவனை களம் இறக்கி ரோகித் சர்மா அணியை இறுதிப்படுத்தி வருகிறார்.
இவ்வேளையில் இந்திய அணியில் தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் அசத்தலாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் கடைசி போட்டியில் அரை சதம் அடித்து அசத்திய அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.