
‘He tries to follow his instincts far too much’ – Zaheer Khan not impressed with Rishabh Pant’s cap (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள சூழலில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் அட்டகாசமான கம்பேக் கொடுத்தது. இதனால் விமர்சனங்களுக்கும் முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் மீது மட்டும் இன்னும் விமர்சனங்கள் ஓய்ந்த பாடில்லை.
நடப்பு தொடரில் ரிஷப் பந்தின் கேப்டன்சி சரியில்லை என கூறுகின்றனர். முதல் 2 போட்டிகளில் அக்ஷர் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஏன் டாப் ஆர்டரில் களமிறக்கவில்லை. பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.