
'He's Been an Absolute Legend': Sangakkara (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டித்தூக்கியது. ஏற்கனவே தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்கவைத்திருந்தது.
இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய 21 பேரில் 7 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும், 14 பேர் உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களை வாங்கிய பிறகு 48 கோடியில், 2.85 கோடி மீத தொகை இருந்தது.
இந்த தொகையை பயன்படுத்தி ஷாருக் கான் போன்ற திறமையான வீரர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். சுரேஷ் ரெய்னாவைக் கூட அடிப்படை தொகையான 2 கோடிக்கு வாங்கியிருக்கலாம். ஆனால், சிஎஸ்கே அந்த தொகையை மிச்சப்படுத்தியது. இது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது. அவர் ஏன் வாங்கப்படவில்லை என்ற காரணத்தை இதுவரை சிஎஸ்கே கூறவில்லை.