
Hong Kong players gift Virat Kohli team jersey with a heartfelt message (Image Source: Twitter)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஹாங்காங் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது.
193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 152 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார். விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் இருந்துவந்தது இந்திய அணிக்கு கவலையாக இருந்தது மட்டுமல்லாது, கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.