Advertisement

தோனி குறித்து வைரலாகும் சந்தீப் சர்மா ட்வீட்!

கனவு நிறைவேறியது என்று நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வெற்றி பெற்றுத் தந்த சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 13, 2023 • 18:17 PM
Honour to share the field…’: Sandeep Sharma
Honour to share the field…’: Sandeep Sharma (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் தோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்று ராஜஸ்தான் அணிக்கு கடும் போட்டியை அளித்தது.

கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தோனிக்கு யாக்கர் வீசி வெறும் இரண்டு மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா.

Trending


 

இந்த நிலையில் கடைசி ஓவர் குறித்து சந்தீப் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய 200 வது ஐபிஎல் போட்டிக்கு வாழ்த்துகள் தோனி பாஜி. உங்களுடன் இந்தக் களத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். எப்போது நன்றியுடன் இருப்பேன். என் கனவு நிறைவேறியது.” என்று பதிவிட்டுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement