
ஐபிஎல் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் தோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்று ராஜஸ்தான் அணிக்கு கடும் போட்டியை அளித்தது.
கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தோனிக்கு யாக்கர் வீசி வெறும் இரண்டு மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா.
Congratulations @msdhoni paji for the 200 IPL matches. An honour to share the field and bowl to him. Forever grateful. #dreamcometrue pic.twitter.com/Yz49yG6Ut5
— Sandeep sharma (@sandeep25a) April 12, 2023