
'Honoured' Priyank Panchal 'Looking Forward' To Don India Jersey In South Africa (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்,, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்குகிறது.
டெஸ்ட் தொடருக்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மும்பையில் இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு 3 நாள் பயிற்சியில் ஈடுபட்டனர்
இந்த நிலையில், துணைக்கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரியாங் பாஞ்சால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். பிரியாங் பாஞ்சால் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க ஏ தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தினார்.