
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி குரூப்2இல் அங்கம் வகிக்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் தோற்கடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நெதர்லாந்துடன் இன்று சிட்னியில் மோதுகிறது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசியுள்ள நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்காட் எட்வர்ட்ஸ், "உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பது கனவு. அதுவும் உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை. இந்த ஆட்டத்தை வீரர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.