
'I Don't Think Kohli & Indian Team Were Brave Enough': Kapil Dev (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் விளையாடிய இரண்டு போட்டியிலும் படுதோல்வியைச் சந்தித்து, அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது.
அதிலும் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 111 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.
போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, “நாங்கள் துணிச்சலாக ஆடவில்லை. பேட்டிங்/பவுலிங் இரண்டிலுமே துணிச்சலாக செயல்படவில்லை. சொல்லப்போனால், இவ்வளவு குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு பவுலிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஒன்றுமேயில்லை.