
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துக்கும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.
இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துவதற்கு இருக்கிறது. இந்திய அணி ஆரம்ப கட்டப் போட்டிகளில் மிகவும் வலிமையான அணிகளை எதிர்கொள்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பாகிஸ்தான் அணி அக்டோபர் ஆறாம் தேதி, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணியுடன் தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மோத இருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் மிக அதிகபட்சமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.