Advertisement
Advertisement
Advertisement

நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்!

நான் ஒரு கேப்டனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisement
நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்!
நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 31, 2024 • 01:17 PM

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்டிங்கில் சரியாக சோபிக்காத பட்சத்திலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 ரன்களை சேர்த்திருந்தார். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 31, 2024 • 01:17 PM

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அசத்தலான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். இதில் நிஷங்கா 26 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேராவும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் குசால் மெண்டிஸ் 43 ரன்களிலும், குசால் பெரேரா 46 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொதப்பினர். 

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியும் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்க்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட இலங்கை அணி 2  ரன்களுக்கே 2 விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அதன்பின் சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. 

மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வாஷிங்டன் சுந்தரும், தொடர்நாயகன் விருதை சூர்யகுமார் யாதவும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய சூர்யகுமார் யாதவ், “கடைசி போட்டி பிறகு, சில வீரர்களிடம் அடுத்த போட்டியில் உங்களுக்கு பதிலாக மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளேன் என்று கூறினே. அதற்கு அவர்கள் உடனடியாக என்னிடம் 'சரி நாங்கள் ஓய்வெடுகிறோம், நீங்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பளிகவும்' என்று கூறினர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இது அணியின் தன்மையையும், மற்றவர்களின் செயல்திறனுக்காக அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்கள் என் வேலையை எளிதாக்கியுள்ளனர். நான் பேட்டிங்கிற்குச் செல்லும்போது, ​​எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருக்கிறது, என்னை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடருக்கு முன் நான் கூறியது ஒன்றுதான், “நான் ஒரு கேப்டனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement