
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்களில் வென்றது ப்லே ஆஃப் சுற்றை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி உறுதி செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20ஓவர்ளில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்து. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.
லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டீ காக் காட்டடிஆட்டம் ஆடி 70 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர் , 3பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் லக்னோ அணி வென்றதையடுத்து, ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறியது.
இந்தப் போட்டியி்ன் வெற்றிக்குப்பின் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் “ கடைசி சில ஓவர்களில் குயிண்டன் டீ காக் அடித்த ஷாட்களைப் பார்த்து நான் ஒரு பார்வையாளராகத்தான் இருந்தேன். டீகாக் தான் சந்தித்த பந்துகளை சரியான ஷாட்களாக ஆடினார்.