
'I Take Full Responsibility': Rohit Sharma After MI's Sixth Straight Loss Of IPL 2022 (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 103* ரன்களும், மணிஷ் பாண்டே 38 ரன்களும் எடுத்தனர்.