
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் உத்திரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் விளையாடுகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வது முக்கியமானதாக இருக்கிறது. தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து இந்தியா என மூன்று முக்கிய அணிகளும் நல்ல ரன் ரேட் பெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து இந்தியா இரண்டு போட்டிகளில் இரண்டையும் வென்று இருக்கின்றன.
தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் விளையாடி மிகச் சிறந்த ரன் ரேட் வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியா போல் ஒரு போட்டியில் தோற்ற இங்கிலாந்து அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி இறந்த ரன் ரேட்டை பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலியா இன்று மற்றும் ஒரு பெரிய அணியான தென் ஆப்பிரிக்காவிடம் தோற்க கூடாது. தோற்றால் அரை இறுதிக்கு வருவதில் கூட பெரிய பிரச்சனைகள் உருவாகலாம்.
போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் கூறும் பொழுது “அவர்களிடம் இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் இருக்கிறார். அவர் பந்தை ஆரம்பத்தில் ஸ்விங் செய்து நல்ல விக்கெட் பெறுவார். இறுதியில் நல்ல யார்கர்கள் வீசுவார். மேலும் அவர்களிடம் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல வேகத்தில் பவுன்சர் வீசக் கூடியவர்கள்.