
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று அசத்தியது. அந்த அணிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும். இதன் மூலம் அதிக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையைச் சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதில் மிக முக்கிய பங்கு அந்த அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் கான்வேக்கு உண்டு. இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடிய நியூசிலாந்தின் டெவோன் கான்வே 25 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மொத்தம் பதினாறு ஆட்டங்களில் விளையாடி 140 ஸ்ட்ரைக் ரேட்டில், 52 ரன் ஆவரேஜில், 672 ரன்கள் குவித்து அசத்தினார். தற்பொழுது ஐபிஎல் தொடர் குறித்துபேசிய அவர், “எனக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது குறித்து நிச்சயம் நான் ஆச்சரியப்பட்டேன். சாய் சுதர்ஷன்தான் ஆட்டநாயகன் விருது வெல்வார் என்று நான் நினைத்தேன். அவர் நம்ப முடியாத அளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.