
கடந்த 2012/13-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு டி20 போட்டியையும், பாகிஸ்தான் அணி ஒரு டி20 போட்டியையும் வென்றதால் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை 175 ரன்கள் கட்டுப்படுத்தி ஒயிட் வாஷ் செய்வதற்கு ஆவலோடு காத்திருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாச வீழ்த்தி தொடரில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி ஆட்டநாயகன் விருதுகளையும் பெற்றார்.
இந்நிலையில், 2013இல்ல் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து நியாயமாக தோனிக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை எனக்கு கொடுத்திருக்க வேண்டும். அநியாயம் செய்து விட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.