
I want Jadeja to bat up the order more, says Rohit Sharma (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 44 (32), இஷான் கிஷன் 89 (56), ஷ்ரேயஸ் ஐயர் 57 (28) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்ததால், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 192/2 ரன்களை குவித்து அசத்தியது.
இலக்கை துரத்திக் களமறிங்கிய இலங்கை அணியில் அசலங்கா 53 (47), கருணரத்னே 21 (14), சமீரா 24 (14) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ரன்களை சேர்த்தார்கள். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டி வந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டும் எடுத்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.