
கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலி ஒரு ஆட்டத்தில் கூட சதம் விளாச வில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசினார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விராட் கோலியை டி20 அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள் எல்லாம் தற்போது பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் சோயிப் அக்தர், “பாகிஸ்தானுக்கு எதிராக அவர் வாழ்நாளில் சிறந்த இன்னிங்சை விளையாடி இருக்கிறார். என்னால் முடியும் என்று நம்பிக்கையின் வெளிப்பாடாக தான் அவருடைய ஆட்டம் அமைந்தது. விராட் கோலி கடந்த 3 ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனத்தை சந்தித்தார்.
கோலி ரன்களை சரிவர அடிக்கவில்லை. அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பலத்தரப்பு மக்கள் அவரை பல விதமாக பேசினார்கள். சில தரப்பினர், அவருடைய குடும்பத்தினரை எல்லாம் இழுத்து அவரது மனதை காயப்படுத்தினார்கள். ஆனால், கோலி எதையும் பற்றி கவலைப்படாமல் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்தி இருக்கிறார்.