
‘I will take this win over one-sided victories,’ says Rohit Sharma (Image Source: Google)
ஆசியக் கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஷ்வான் மட்டுமே சிறப்பாக விளையாடி 43 ரன்களை சேர்த்தார். அடுத்து 4ஆவது இடத்தில் களமிறங்கிய அஃப்திகார் அகமதும் 28 ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்.
பாபர் அசாம் 10, பக்கர் ஸமான் 10 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இறுதியில் பௌலர்கள் ஹரிஸ் ரௌப் 13, தஹானி 16 ஆகியோர் கொஞ்சம் ரன்களை அடித்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147/10 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4/26, ஹார்திக் பாண்டியா 2/33 ஆகியோர் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.