
ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இந்தியாவின் பவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருக்கும். பிசிசிஐ வைத்தால் தான் சட்டம், பிசிசிஐ நினைத்தது தான் ஐசிசியில் நடக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தேதே. உலகிற்கு எப்படி அமெரிக்காவோ, ஐசிசிக்கு பிசிசிஐ.
அதற்கு காரணம்,இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து ஐசிசியின் சக்கரமே ஓடுகிறது. இந்த நிலையில், பிசிசிஐ சில விசயங்களில் அளவுக்கு மீறி செய்யும் சில சம்பவங்கள் மற்ற நாடுகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடத்தும் ஐசிசி தொடருக்கு வரியை பிசிசிஐ செலுத்தாது என்று அறிவித்து, ஐசிசி தான் அதனை செலுத்த வேண்டும் என்று கூறியது. இதற்கு வேறு வழியின்றி ஐசிசியும் ஒப்பு கொண்டது.
இதனால் இந்தியாவின் ஆதிக்கத்தை அடக்க, மற்ற நாடுகள் பாகிஸ்தான் பக்கம் திரும்பி அதரவு வழங்க தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 2025 சாம்பியன்ஸ் கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.