Advertisement
Advertisement

எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது - தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஐசிசி!

இந்த தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம் என்று ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 30, 2024 • 21:22 PM
எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது - தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஐசிசி!
எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது - தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஐசிசி! (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இத்தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஜூன் 5ஆம் தேதி தங்களுடையை முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது ஜூன் 09ஆம் தேதி நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Trending


ஒவ்வொரு முறையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான். அதிலும் உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோது போட்டிக்கு கூடுதல் ஆதரவு இருக்கும். ஏனெனில் இரு நாட்டுக்கு இடையே இருக்கும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை.

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல், ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

அந்தவகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தீவிரவாத தக்குதல் நடத்த உள்ளதாக தீவிரவாத குழு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இப்போட்டிக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். மேற்கொண்டு இத்தொடரில் இந்த மைதானத்தில் மட்டுமே 9 போட்டிகள் நடைபெறவுள்ளதால் அனைத்து போட்டிகளுக்குமான பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஐசிசி செய்தி தொடர்பாளர், “இத்தொடரில் பங்கேற்கும் அனைவரின் பாதுகாப்பு தான் எங்களின் முதல் முன்னுரிமையாகும். மேலும்,எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது. இந்த தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், போட்டிகளை நடத்தும் அனைத்து மைதானங்களிலும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement