-mdl.jpg)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அதிரடி வீரர் லிட்டன் தாஸ் முதல் பந்திலெயே அடிக்க முயல, மேட் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசனும் 16 ரன்களுக்கும், நஹ்முல் ஹொசைன் சாண்டொ 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஹதி ஹசன் மிராஸ் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிக்கூர் ரஹிம் அரைசதம் கடந்தும் அசத்தினார்.