
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கெற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கெற்றவாரு தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தி வருகின்றன.
இந்நிலையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபீக் - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா ஷஃபீக் சிராஜ் பந்துவீச்சில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஒரு பக்கம் பாபர் அசாம் நிதானமாக பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் இமாம் உல் ஹக் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.