
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர். இதில் குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிடததார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான ஆட்டை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்த பதும் நிஷங்க 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மூன்றாவது வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார். இதில் அபாரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெது அசத்தினார்.