Advertisement
Advertisement
Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யுஏஇ-க்கு மாற்றியது ஐசிசி!

வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு நடைபெற இருந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யுஏஇ-க்கு மாற்றியது ஐசிசி!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யுஏஇ-க்கு மாற்றியது ஐசிசி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 20, 2024 • 10:02 PM

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 20, 2024 • 10:02 PM

இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது.

Trending

மேற்கொண்டு தொடரை அங்கு நடத்த முடியாத நிலையில் ஐசிசி வேறுநாட்டு தொடரை மாற்றுவது குறித்த ஆலோசனையில் இறங்கியது. மேலும் இத்தொடர் வேறுநாட்டுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டால், அதனை இந்தியா, இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தும் திட்டம் இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்திருந்தார். 

 

இந்நிலையில், நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசியின் தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், வங்கதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தாதது அவமானகரமானது. வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

எதிர்காலத்தில் ஐசிசி தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படும். ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பையை நடத்த முன் வந்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடரை நடத்த முன் வந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement