
இந்திய கிரிக்கெட்டில் மூத்த வீரர் விருதிமான் சாஹா போட்ட ட்வீட்களும், குற்றச்சாட்டுகளும் தான் தற்போது பெரிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
வாட்ஸ் அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்தார். அதில், "இனி நீ விக்கெட் கீப்பர் கிடையாது; எனது அழைப்பை ஏற்கவில்லை என்றால் இனி உன்னை எப்போதுமே நேர்க்காணல் செய்ய மாட்டேன்; இந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்; பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டியுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு மற்றொரு புறம் டிராவிட், கங்குலி, சேத்தன் சர்மா ஆகியோர் குறித்தும் சாஹா குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட பிசிசிஐ, விருதிமான் சாஹாவிடம் அந்த நபரின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தப்படும். அதில் உண்மை வெளிவரும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என அதிரடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது.