Advertisement

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களை தூண்டும் பீட்டர்சன்!

கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பலர் பயோ-பபுளையும் மீறி தொற்றுக்க

Bharathi Kannan
By Bharathi Kannan May 13, 2021 • 11:22 AM
If England players stand together, they will play rescheduled IPL: Pietersen
If England players stand together, they will play rescheduled IPL: Pietersen (Image Source: Google)
Advertisement

கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பலர் பயோ-பபுளையும் மீறி தொற்றுக்கு ஆளானதாலும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்.

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவேளை வெளிநாட்டில் நடத்தினால், வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்பது தெரியவில்லை.

Trending


ஐபிஎல் தொடரில் விளையாடும் பாதி வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள். குறிப்பாக மோர்கன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ போன்றோர் இங்கிலாந்து அணியில் தேசிய அணிக்காக விளையாட உள்ளனர். இதனால் ஐபிஎல் மீண்டும் நடத்தப்பட்டால் அவர்கள் பங்கேற்பார்களா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், “ஐபிஎல் டி20 தொடர் மீண்டும் நடத்தப்பட்டால், தங்களின் சிறந்த வீரர்களை அதில் விளையாட விடாமல் எவ்வாறு இங்கிலாந்து அணி தடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும், என்ன நடக்கும் என்பதை அறியவும் ஆர்வமாக இருக்கிறது.

நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக நின்ற போது என்னுடன் யாருமில்லை, தனியாக இருந்தேன். இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால், ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement