
ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்தே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மட்டுமே தற்போது வரை விராட் கோலி விளையாடி வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அவர் நடப்பு 14ஆவது ஐபிஎல் சீசன் வரை தொடர்ச்சியாக கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒருமுறையாவது பெங்களூரு அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று விராட் கோலி மிக உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி அணி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை கோலி தவிர விட்டுள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் இரண்டாம் பாதியில் தான் இந்த தொடரோடு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், இனி வரும் தொடர்களில் அணியின் வீரராக விளையாட உள்ளதாகவும் கோலி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எலிமினேட்டர் போட்டிக்குப் பின்னர் தான் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்.