
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிப்போட்டிக்காக காத்திருக்கிறது. ஏனெனில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்த இறுதிப்போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டு, ரிசர்வ் டேவான இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இறுடிப்போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இன்றைய ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டால், லீக் தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்நிலையில் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் வழுத்து வருகின்றன.
மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் தொடர்ந்து விளையாட இம்பேக்ட் பிளேயர் விதியால் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று ஷேன் வாட்சன் வரை நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ம்பேக்ட் பிளேயர் விதியால் அம்பதி ராயுடு தற்போது ஒரு முழு சீசனை விளையாடி தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.