
2022 டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியது. 160 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு நிர்ணயித்தது. இதில் பாபர் அசாம் கோல்டன் டக் ஆகி வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க வேண்டும் என இக்கட்டான நிலையில் இருந்த போது சுழற் பந்துவீச்சாளரை பாபர் அசாம் பயன்படுத்தியது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாபர் அசாமின் கேப்டன்ஷி சரி இல்லை என்று அந்நாட்டில் விமர்சனம் தொடங்கியுள்ளன. மேலும் கேப்டன்ஷியால் ஏற்படும் அழுத்தத்தால் பாபர் அசாம், பேட்டிங்கிலும் சொதப்பி வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை விட்டு விலகுவது தான் அவருக்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் "நெருக்கடியான கட்டத்தில் சீனியர் வீரர்கள் அணியில் முக்கிய பங்காற்ற வேண்டும். கேப்டன் நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்றால் சீனியர்களிடம் சென்று பேச வேண்டும்.