
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில், இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த கேஎல்ராகுல் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரது பேட்டிங் அணுகுமுறையும் இந்திய ரசிகர்களே எதிர் பார்க்காத வகையில் மிகவும் அற்புதமாக அதிரடியாக இருந்தது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிக அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்.
அதே சமயத்தில் ஒருபுறமாக பாகிஸ்தான அணியின் இளம் வேக பந்துவீச்சாளர் நஷீம் ஷா பந்தை உள்ளே வெளியே என்று காற்றில் மாற்றி மாற்றி வீசி இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினார். ஷுப்மன் கில் அவரது ஓவரை ஆரம்பத்தில் ஒரு ஓவர் எதிர்கொண்டதோடு எதிர் கொள்ளவில்லை. இந்த நிலையில் நசீம் ஷா வீச வந்த நான்காவது ஓவரில் ஷுப்மன் கில் பேட்டிங் முனையில் இருந்தால். சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.