
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக சூர்யகுமார் யாதவ் விளங்குகிறார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் மூன்று முறை டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசி சூரியகுமார் யாதவ் அசத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்ல தொடக்க வீரர் அல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் கூட மற்ற வீரர்கள் சற்று தடுமாறினாலும் ராகுல் திரிபாதி, சூரியகுமார் யாதவ் மட்டும்தான் அதிரடியாக விளையாடினார்கள். இந்த வெற்றியின் ரகசியம் என்ன என்பது குறித்து சூரியகுமார் யாதவிடம் ஹர்ஷா பொக்ல கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “விளையாட்டுக்குத் தயாராகும் போது, அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதை நடைமுறைப்படுத்தினால், மைதானத்தில் அழுத்தமான சூழலில் விளையாடும்போது ஆட்டம் கொஞ்சம் எளிதாகிவிடும். அவ்வளவு எளிதல்ல. நிறைய கடின உழைப்பு தேவை. உங்கள் விளையாட்டின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நீங்கள் அறிந்து அதற்கேற்ப தயாராக வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.