Advertisement

சாய் சுதர்சனை இனி அடிக்கடி பார்ப்பீர்கள் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!

சாய் சுதர்சன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் லீக அணிக்காகவும் சரி இந்திய அணிக்காகவும் சரி பெரிய சாதனைகளை செய்வார் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 05, 2023 • 11:09 AM
‘In two years, he might play for India…’: Hardik Pandya's bold prediction for Gujarat Titans youngst
‘In two years, he might play for India…’: Hardik Pandya's bold prediction for Gujarat Titans youngst (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல திறமையான இளம் வீரர்களின் வாழ்க்கையில் பிரகாசமான ஒளியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் பங்கேற்ற பல வீரர்கள் தங்களது தேசிய அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான சாய் சுதர்சன் என்பவர் ஐபிஎல் தொடரில் கெத்து காட்டி வருகிறார்.

முதல் ஆட்டத்தில் இம்பேக்ட் வீரராக வந்த சாய் சுதர்சன் நேற்றைய ஆட்டத்தில் ஆன்ரிச் நோர்ட்ஜே போன்ற மிரட்டலான வேகப்பந்துவீச்சாளர்களை லாபகமாக எதிர் கொண்டு ரன்கள் சேர்த்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 62 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

Trending


இந்த நிலையில் குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றது. இது குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “முதலில் எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. ஏனென்றால் ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்றே எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடந்தது. அதனால் தான் பந்து அங்கேயும் இங்கேயும் சென்றது. நாங்கள் பவர் பிளேவில் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கொடுத்து விட்டோம். எனினும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

நான் என்னுடைய உள்ளுணர்வை சார்ந்து விளையாடுகிறேன். முதலில் என்னை நான் நம்புகிறேன். நான் எடுக்கும் முடிவால் சரிவு நிகழ்ந்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு, தவிர மற்றவர்கள் கிடையாது. அடி வாங்குவதை விட முதல் அடி எனதாக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் அணியின் வெற்றியே நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருக்க தான் வந்திருக்கிறோம் என்ற உணர்வால் தான்.

நாம் உற்சாகமாக இருந்தால் சரியான முடிவை எடுக்க நேரிடும். எங்கள் அணியில் ஏதேனும் ஒரு வீரர் முக்கியமான கட்டத்தில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். இதைப் பற்றி நாங்கள் நிறையவே பேசி இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது மிகவும் முக்கியம். சாய் சுதர்சனை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் திறமையான வீரராக விளங்குகிறார். கடந்த 15 நாட்களாக சாய் சுதர்சன் வலைப் பயிற்சியில் தீவிரமாக பேட்டிங் செய்து வருகிறார்.

அவர் போட்ட உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சாய் சுதர்சன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் லீக அணிக்காகவும் சரி இந்திய அணிக்காகவும் சரி பெரிய சாதனைகளை செய்வார். நீங்கள் அவரை அடிக்கடி இனி பார்ப்பீர்கள்” என்று ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement